பகவான் கிருஷ்ணரை வழிபடும் போது அவரது வெவ்வேறு அங்கங்களான தேவர்களும் தானாகவே வழிபடப்படுகின்றனர்; எனவே, தேவர்களைத் தனியாக வழிபடும் அவசியம் ஏதுமில்லை. இதன் காரணத்தால், கிருஷ்ண உணர்விலுள்ள பக்தர்கள், உணவை கிருஷ்ணருக்குப் படைத்தபின் உட்கொள்கின்றனர். இஃது உடலை ஆன்மீகத்தில் வளப்படுத்துகின்றது. இத்தகு செயலால், உடலின் பழைய பாவ விளைவுகள் அழிவது மட்டுமின்றி, ஜட இயற்கையின் எல்லாக் களங்கங்களிலிருந்தும் பூரண பாதுகாப்பு ஏற்படுகிறது.

கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட உணவை மட்டுமே உண்ணும் கிருஷ்ண பக்தர், ஆன்மீகத் தன்னுணர்வின் முன்னேற்றப் பாதையில் தடங்கல்களாக உள்ள (முந்தைய) ஜட பாதிப்புகளை வெற்றிகொள்ள முடியும்.

பகவத் கீதை உண்மையுருவில் 3.14 ஸ்ரீல பிரபுபாதருடைய விளக்கவுரை